நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Saturday, June 11, 2011





தமிழ் அன்பானது ..!!
"அம்மா... அம்மா... அம்மா சொல்லு ..."
சிலர் பூமியில் கேட்ட
முதல் வாக்கியம்
ஒரு அமுத மொழி
நம் தாய் மொழிந்திட ..

தமிழ் நம் பேச்சானது..!!
பிறர் பேச நாம் கேட்டு
அனைவரும் பேச நாமும் பேசிட..

தமிழ் பழமையானது..!!
திருக்குறள் வாசித்து
அறவழியில் நடந்திட..

தமிழ் அழகானது..
பல சொற்களுக்கு
பொருள் அறிந்து
பக்கம் பக்கமாக எழுதிட..

தமிழ் இனிமையானது...!!
மழலை பேசி
நாம் ரசித்து மகிழ்ந்திட..

தமிழ் காதலானது ..!!
கவிதை பிறந்து
கருத்துக்கள் உணர்ந்திட..

தமிழ் காப்பியமானது..!!
கதை படைத்து
காதல் சிறந்திட..

தமிழ் புகழ் பெற்றது ..!!
பிறர் நம் தமிழ் கற்று
புலமையில் செழிந்திட ..

தமிழ் செம்மொழி ஆனது ..!!
வீரத்தையும் காதலையும்
இரு கண்களாக கொண்டு
திராவிட மக்கள் தமிழ் பேசி வாழ்ந்திட..

தமிழ் தொண்மையில் சிறந்தது..!!
தமிழர் பண்பாடு
யுகங்கள் பல கடந்திட ..

தமிழ் கடவுளானது..!!
முருகா என்று பக்தர்கள்
என்றும் போற்றி வணங்கிட..