நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Thursday, April 19, 2012





கண்ணாடி  முன்  சிரித்து  சிரித்து
தேடி  பார்த்தேன் ..,


நிஜமாகவே  அவன்  தந்த  முத்தங்கள்
என்  கன்னங்குழி  விழுங்கி  தான்
விட்டது  போலும் ... !!



"நான்  நினைத்தால்  புரைலாம்  ஏறவேண்டாம்
என்  கைபேசிக்கு  ஒரு  அழைப்பு  போதும் .." - என்று

அவனை  நினைத்து கைபெசியிடம்
 சண்டையிட்ட - அடுத்த 
அரை  நொடியில்  
அவன்  பெயருடன் அழைப்பு ..





நெஞ்சினில் ஒரு  படபடப்பு ..
அவன்  முதல்  வார்த்தையே

 "என்னை நினைத்தாயா ..?"

 

வெட்கத்தில்  சிவந்தேன் ..
கண்ணீருடன்  சிரித்தேன் ..


காதல் என்ன இத்தனை அழகா ..?


அவன்  பார்க்காத  பொழுது
என்  வெட்கத்தை  தேடுகிறேன்
அதையும்  திருடிவிட்டான்
கள்ளன் !!!