நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Monday, September 23, 2013

♥ அழகிய காதல் கதை தொடங்கிய இரவு ♥


" தூங்கலயா ..? " என்று கேட்டாய் 

"எப்படி தூக்கம் வரும் 
என் கடவுளிடம் அல்லவா 
காதலை சொல்லிவிட்டேன்" என்றேன் 

"நானும் தூங்கல தெரியுமா ??"

"ம்ம் .. அப்படியா தெரியாதே .. !!" என்று கொஞ்சினேன் 


"கடவுள் சொல்றேன்'ல தெரிந்துக்கொள்  காதலியே.." என்றாய் 



நாணத்தில் கட்டிகொண்டேன் என் தலையனையை !!

மற்றவை நேரில் ♥ ♥ ♥

உனக்கு கவிதை எழுத தெரியாதா ..?

அதான் நீ காதலுடன்
பார்க்கும் போதும் 
பேசும் போதும் 
கொஞ்சும் போதும் 
நினைக்கும் போதும் 
சிவந்து போகிறேனே நாணத்தில் 
உன் கவிதை பிடிக்காமலா   ??