நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Wednesday, October 12, 2011

நினைவில் ஒரு சாரல்



பகலில் கொஞ்சம் மழை
அவள் என்றும் கொஞ்சும் மழை..

என்னவள் இல்லை அவள்
என் நினைப்பில் என்றும் அவள்..



மழை பெய்த நேரம்
அவள் வரவில்லை

நான் காத்திருந்தது
மழைக்காகவா..?




"மழை பெய்தால் காதல்
இல்லை என்றாலும் காதல் தான்"
என்று மனதில் ஒரு முடிவு
"இது காதல் என்று சொல்லலாம் "



அவள் கடந்தாள் ஒரு சாரலோடு...
முந்தியது என் குடை ..
பறந்தது அவள் முன்னே ..


மழையில் முழுதும் நனைந்தேன்..
அவள் சிரிப்பில் கொஞ்சம் மூழ்கியே..

அவள் கண்கள் சந்தித்த நொடி..
மின்னலோடு ஒலித்தது இடி..

சில்லென்று ஒரு சாரல்
என் மனதிலும் மின்சாரல் ..

நாட்கள் கடந்தது..
மழையும் நின்றது..

காதலுக்காக நட்பு எனும் உடையுடன்
நான் அன்று அவளுடன் ..

பேசிக்கொண்டே இருப்பாள்..
நான் மிதந்து கொண்டே இருக்க..

அவள் மனம் புரிந்தது..
அவளுக்கு திருமணமும் முடிந்தது..



மாதங்கள் ஓடின ....
அவள் என் நினைவிலிருந்து மறைய ...

மீண்டும் மழை..






அவள் கொஞ்சிய மழை
இன்று என்னுடன்
அவள் ஞாபகமாக ..







ஹ்ம்ம்.. எனக்கும் அழகான முதல் காதல்
"நெஞ்சுக்குள் பெய்திடும்..." பாடல் என் கைபேசியில்
ஒலித்துக்கொண்டே இருக்க..,
அவள் என் நினைவில் என்றாவது  முனுமுனுத்தபடியே ..