நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Tuesday, July 26, 2011

உனக்கான நொடிகள்






"நீ தான் என் உயிர் தோழன்" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
என் உயிரையே கடவுளாக  எண்ணினேன்...

" உனக்கு என்னை எவ்வளவு  பிடிக்கும்" என்று நீ கேட்ட அந்த ஒரு நொடி
நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தேன் இன்னமும் முடிக்கவ​ில்லை..

"உனக்காக நான் இருக்கிறேன்" என்று நீ சொன்ன
அந்த ஒரு நொடி ரசித்தேன் என்னை முதல் முறையாக..

"உனக்காக தான் வந்தேன்" என்று நீ சொன்ன
அந்த ஒரு நொடி பொழுதாயின
காத்திருந்த நேரங்கள் அனைத்தும்

"நான் நலம்" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
என் கஷ்டங்கள் அனைத்தும் கரைந்தன சந்தோஷக்கடலில்..

"அவனுக்கான கவிதை இதோ" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
 உன்னக்காக நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் மறைந்துக்கொண்டன
"அற்புதம்" என்ற என் வார்த்தைக்கு பின்னால்..

"எனக்கு பிடித்த பாடல் " என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
அதன் வரிகள் அனைத்தும் மனதில் பதிந்தன..

"நான் அவனை  காதலிக்கிறேன்" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
என் கவிதைகள் அனைத்தும் தூக்கில் தொங்கின..

"பேச நேரமில்லை" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
பேசும் மொழியையும் மறந்தேன்

"எனக்கு கவிதை வேண்டும்" என்று நீ கேட்ட அந்த ஒரு நொடி
மீண்டும் கற்றேன் மறந்த மொழியை

"நாளைக்கு பேசலாம்" என்று நீ சொன்ன அந்த நொடியிளிர்ந்து
அந்த நாளைக்காக இன்னமும் உயிர் வாழ்கிறேன்..

இந்த நொடியில்  நீ உயிரோடு இல்லை
எந்த நொடியிலும் இல்லாத உனக்காக
என்னை  மறந்த காதல் காத்துக்கொண்டிருக்கிறது..