நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Thursday, May 23, 2013

யாரோ இவள் .. ?

ஒரு மாலை நேரம் 
பார்த்துக்கொண்டே இருந்தேன் .. 
"போதும் என்னை படித்தது" என்றாள் .,
என் பேசும் பொம்மையோ ..?





"நீ.. என் அருகில்..
அதனால் ..
இன்னும்  எவ்வளவு நேரம் பறப்போம்"
தயங்கி தயங்கி சட்டென்று சொல்லி முடித்தாள் .,
என் கனவுக்கன்னியோ  ..?

    எழுதி கொண்டு இருந்தேன்
    "அழகான ஓவியம்" என்றாள்
    ஓவியத்தை காண்பித்த பொழுது
    " சிற்பம் அருமை"  என்று 

    பொய் சொன்னாள்  என்  ரசிகையோ ..?


கடற்கரையில் நடந்த பொழுது 
"வானிலிருந்து இறங்கலாமா " என்றாள்
 என் தேவதையோ .. ?


   
   ஒரு முறை  திட்டினேன்
   "போதும் வர்ணித்தது" என்றாள்
   கண்ணை சிமிட்டி சிரித்துக்கொண்டே..
   என் தோழியோ ..?




ஆசை வார்த்தைகளை அவளிடம் சொன்னேன்
"கவிதை அழகாய் இருக்கிறது"
என்றாள் என்னை கட்டிக்கொண்டு
என் குழந்தையோ .. ? 


  

   "இனிமேல் நான் உனக்கு" என்றேன் 
   "இல்லை எனக்கு மட்டுந்தான்" என்றாளே
   
கன்னம்  சிவக்க ..,
   என் காதலியோ..?



"கல்யாணம் நாளைக்கா ? "-என்று கேட்டேன்
"இல்லை ..
இப்பொழுதே .."
என்றாள் கோபமாக ..


என் மனைவி  தான் சந்தேகமே இல்லை !!




Wednesday, May 22, 2013


யார்  யாரோ  சொல்லுவர் -கண்கள் 
சந்தித்தால் தான் 
காதல்
கண் சிமிட்டும் என்று 
ஆனால்..
உன் மூக்கில் மேல் 
ஊஞ்சல் ஆடும்  கண்ணாடியை  தானே பார்த்தேன் ..
எனக்கு மட்டும்  ஏன்  இப்படி ..