NKarikalan
நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்
Saturday, May 14, 2011
"
தொலைந்து போ
"
என்ற உன் சொல்லுக்கு எவ்வளவு மரியாதை
இன்னமும் தேடி கொண்டே தான் இருக்கிறேன்
தொலைந்த என்னை
தொலையாத உன்னுள் . . ! !
Friday, May 13, 2011
என்றாவது தான் வெளியே செல்கிறேன்
எத்தனை முகங்கள்
புறக்கண்கள் தேடினது உன்னை மட்டும்...
அலுத்துக்கொண்டேன் நான்...
இந்த கூடத்திலும் நீ இல்லை..
அகக்கண்கள் தேடினது என்னை மட்டும்
நீ வாழும் திசையில்...
தமிழை ருசிப்பவர்களை ரசிப்பவள் நான்
என்று தானே கூறினேன்
உனக்கு பிடித்த தமிழ் என்பதால்..
உன்னை கொஞ்சமாக பிடிக்கும் என்று சொன்னேன்
உன்னை நேசிக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டி
உன்னை பிடிக்கவே இல்லை என்று சொன்னேன்
உன் பிரிவையும் நேசிக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டி
எத்தனை பிறவியும் எடுப்பேன்
உன்னுடன் சேர்ந்து வாழ
"காதலிக்கிறேன்" என்று
ஒருமுறை சொல்லிவிடு போ
தும்..!!!
நீ ஒரு வார்த்தை பேசினாலே போதும்
வானில் பறந்து போகிற நான்..
மறுவார்த்தை கேட்கவே
தரையில் இறங்கிவிடுகிறேன்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)