நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Wednesday, October 12, 2011

நினைவில் ஒரு சாரல்



பகலில் கொஞ்சம் மழை
அவள் என்றும் கொஞ்சும் மழை..

என்னவள் இல்லை அவள்
என் நினைப்பில் என்றும் அவள்..



மழை பெய்த நேரம்
அவள் வரவில்லை

நான் காத்திருந்தது
மழைக்காகவா..?




"மழை பெய்தால் காதல்
இல்லை என்றாலும் காதல் தான்"
என்று மனதில் ஒரு முடிவு
"இது காதல் என்று சொல்லலாம் "



அவள் கடந்தாள் ஒரு சாரலோடு...
முந்தியது என் குடை ..
பறந்தது அவள் முன்னே ..


மழையில் முழுதும் நனைந்தேன்..
அவள் சிரிப்பில் கொஞ்சம் மூழ்கியே..

அவள் கண்கள் சந்தித்த நொடி..
மின்னலோடு ஒலித்தது இடி..

சில்லென்று ஒரு சாரல்
என் மனதிலும் மின்சாரல் ..

நாட்கள் கடந்தது..
மழையும் நின்றது..

காதலுக்காக நட்பு எனும் உடையுடன்
நான் அன்று அவளுடன் ..

பேசிக்கொண்டே இருப்பாள்..
நான் மிதந்து கொண்டே இருக்க..

அவள் மனம் புரிந்தது..
அவளுக்கு திருமணமும் முடிந்தது..



மாதங்கள் ஓடின ....
அவள் என் நினைவிலிருந்து மறைய ...

மீண்டும் மழை..






அவள் கொஞ்சிய மழை
இன்று என்னுடன்
அவள் ஞாபகமாக ..







ஹ்ம்ம்.. எனக்கும் அழகான முதல் காதல்
"நெஞ்சுக்குள் பெய்திடும்..." பாடல் என் கைபேசியில்
ஒலித்துக்கொண்டே இருக்க..,
அவள் என் நினைவில் என்றாவது  முனுமுனுத்தபடியே ..


Monday, September 26, 2011

கல்யாணம் முடிஞ்சாச்சு !!!! காதலில் விழுந்தாச்சு !!!!



எனக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக
தூங்க மடி தரும் அன்னையாக..,

கை பிடித்து நடக்கும் தந்தையாக
தோள் சாய்ந்து  பேசும் தோழியாக..,
அடித்து சண்டையிடும் தம்பியாக
என்றும் பாதுகாக்கும் அண்ணனாக..,

காதலோடு பழக காதலனாக
என் வாழ்க்கைக்கு துணையாக ..,
வந்த 
என் கணவனால்  

புரிந்துக்கொண்டேன் காதலை !!!





முதல் காதல் 

"ஏன் சிரிக்கிறாய்" ,என்று கோபமாக  தான் கேட்டேன்
அவனோ " உன் கோபத்தில் எனக்கு ஒரு கவிதை தோணுச்சு 
என் சிரிப்பில் உனக்கு ஒரு காதல் தோன்றியது போல"
என்றானே சிரித்துக்கொண்டே
மறுபடியும் விழுந்தேன் காதலில்..



வெட்கத்தில் கொஞ்சம் கண்ணீர் 

"நீ குழந்தைடி"  என்று கேலி செய்ய
"இல்லை இல்லை நான் உனக்கு என்றும் பிடித்த அம்மா" என்றதும்
"ஏன் நான் அம்மா மாதிரி இல்லையா..?" 
"ம்ம்ம்..?" என்று விழித்ததில்.. சிரித்தான்..
இம்முறை காதல் என் கண்களில் கண்ணீராக ..



இரவில் பேசிய ரகசியம் 

என் காதருகில் ரகசியம் பேசினான் " தூங்கிட்டியா" 
"இல்லையே.." என்றேன் 
" அப்போ காதலிக்கிறேன்னு சொல்லு " என்று அதட்டினான் 
"நான் தூங்கிட்டேன் .." என்றேன் சட்டென்று 
" ம்ம்ம் .. குட்நைட்  கள்ளி " என்றானே சிரித்துக்கொண்டே..
பார்க்கவில்லை என்றாலும் 
அவன் சிரிப்பதை உணர்ந்தேன் 
காதலில் விழுந்தேன்
கனவில் மிதந்தேன் .. 



என் கணவனுக்கு நான் தான் காதலி 

நடு ராத்திரியில் என்னை எழுப்பி
"என் காதலி  
காதலை சொல்லுடி" என்றான் 
"என் கணவா
இது என்ன கனவா ??? " 
என்று  தூக்க-கலக்கத்தில்  கேட்க  

"நிஜமா 
நிஜத்தில் 
ஒரே ஒரு முறை.."

"நானும் சிரிப்பேனே "ஈ...."
காதலில் விழு பிறகு சொல்றேனே .."
.........................
பதில்  வரவே  இல்லை  


  

நெஞ்சம் பொறுக்கவில்லை அழுகை நிறுத்தவில்லை 

ஒரு மாலை நேரம் 
சிரித்துக்கொண்டே இருந்தான்
ஏதோ ஒரு சங்கடத்தில் " என் இப்படி சிரிக்கிற " என்று கேட்க
" நீ காதலில் விழுவாய் என்றால்
சிரித்துக்கொண்டே கூட  சாவேன்
என் செல்லமே.." என்றானே போதும்
விடியும் வரை அழுது கொட்டி தீர்த்தேன்.., 
என்னவன் சமாதானம் செய்து கொண்டே இருக்க.. 



விடிந்ததும் குழப்பம் 


தூங்கிகொண்டே இருந்தான்
நான் பார்த்துக்கொண்டே இருக்க

கண்கள் மூடியபடி 
உதடு மட்டும் அசைந்தது " பார்த்தது போதும்" என்றான் 
புன்முறுவலில் என்னை மயக்கியபடி ..
" பார்க்க பார்க்க பிடிக்குமோ என்று பார்த்தேன்" என்றேன் முணுமுணுத்தப்படி 

" அப்போ பிடிக்கலையா ..?" என்று கண்விழித்து  கேட்டான்
பதில் சொல்லாமல் கடுப்பில் சென்றேன்..
அவன் குரல் மட்டும் தூரத்தில்
"எங்கடி போற..??? 
..................................
சரி என்ன பாரேன் கொஞ்ச நேரம்.. 
...................................
நிஜமாவே பிடிக்கலையா ..??? "
வெட்கத்தில் ஒளிந்தேன்
சமையல் அறையில்...  



காதலை சொல்லியாச்சு 

" என் கால்களை
தொட துடிக்கும் 
அலைகள் மீது 
என்ன கோபமோ..
என்னை தூக்கிக்கொண்டே நடந்தா
னே
சிடு சிடுவென கடற்கரையில்.."


"கோமா..??"
என்று கேட்டேன்  தயக்கத்துடன் 
"ம்ம்.." பதில் மட்டும் விடுக்கென்று 

"எவ்ளோ கோவம்??"
"..................."
"சொல்லேன்"
".................."
"சிரி"
"........................."

"ஹ்ம்ம்.. 
ரி  .. 
காதலிக்கிறேன் போதுமா..?"
"......................."
பதில் சொல்லாமல் விடு விடு என்று நடந்துக் கொண்டே இருந்தான் ..

"என்ன ஆச்சு..??"
என்று அலையோசை சத்தத்தையும் மீறி கேட்க 


" நானும் காதலிக்கிறேன் "
என்றான் பொறுமையாக..

"ஓஹோ எப்போதிலிருந்து ..?"
என்றேன் மெதுவாக 
"நீ அப்போ சிரிச்ச ல.."
பதில் வந்தது மிகவும் சாதாரணமாக 
"நா உன்ன மாதிரி அழகாலாம் சிரிக்க மாட்டேனே.."என்றேன் 

"போடி பைத்தியம் " என்று சொல்லி சிரித்தானே
அட கடவுளே.. 
எத்தனை முறை தான்
நான் காதலில் விழுவேன்.. !!!!

 

Tuesday, July 26, 2011

உனக்கான நொடிகள்






"நீ தான் என் உயிர் தோழன்" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
என் உயிரையே கடவுளாக  எண்ணினேன்...

" உனக்கு என்னை எவ்வளவு  பிடிக்கும்" என்று நீ கேட்ட அந்த ஒரு நொடி
நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தேன் இன்னமும் முடிக்கவ​ில்லை..

"உனக்காக நான் இருக்கிறேன்" என்று நீ சொன்ன
அந்த ஒரு நொடி ரசித்தேன் என்னை முதல் முறையாக..

"உனக்காக தான் வந்தேன்" என்று நீ சொன்ன
அந்த ஒரு நொடி பொழுதாயின
காத்திருந்த நேரங்கள் அனைத்தும்

"நான் நலம்" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
என் கஷ்டங்கள் அனைத்தும் கரைந்தன சந்தோஷக்கடலில்..

"அவனுக்கான கவிதை இதோ" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
 உன்னக்காக நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் மறைந்துக்கொண்டன
"அற்புதம்" என்ற என் வார்த்தைக்கு பின்னால்..

"எனக்கு பிடித்த பாடல் " என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
அதன் வரிகள் அனைத்தும் மனதில் பதிந்தன..

"நான் அவனை  காதலிக்கிறேன்" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
என் கவிதைகள் அனைத்தும் தூக்கில் தொங்கின..

"பேச நேரமில்லை" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
பேசும் மொழியையும் மறந்தேன்

"எனக்கு கவிதை வேண்டும்" என்று நீ கேட்ட அந்த ஒரு நொடி
மீண்டும் கற்றேன் மறந்த மொழியை

"நாளைக்கு பேசலாம்" என்று நீ சொன்ன அந்த நொடியிளிர்ந்து
அந்த நாளைக்காக இன்னமும் உயிர் வாழ்கிறேன்..

இந்த நொடியில்  நீ உயிரோடு இல்லை
எந்த நொடியிலும் இல்லாத உனக்காக
என்னை  மறந்த காதல் காத்துக்கொண்டிருக்கிறது..




Saturday, June 11, 2011





தமிழ் அன்பானது ..!!
"அம்மா... அம்மா... அம்மா சொல்லு ..."
சிலர் பூமியில் கேட்ட
முதல் வாக்கியம்
ஒரு அமுத மொழி
நம் தாய் மொழிந்திட ..

தமிழ் நம் பேச்சானது..!!
பிறர் பேச நாம் கேட்டு
அனைவரும் பேச நாமும் பேசிட..

தமிழ் பழமையானது..!!
திருக்குறள் வாசித்து
அறவழியில் நடந்திட..

தமிழ் அழகானது..
பல சொற்களுக்கு
பொருள் அறிந்து
பக்கம் பக்கமாக எழுதிட..

தமிழ் இனிமையானது...!!
மழலை பேசி
நாம் ரசித்து மகிழ்ந்திட..

தமிழ் காதலானது ..!!
கவிதை பிறந்து
கருத்துக்கள் உணர்ந்திட..

தமிழ் காப்பியமானது..!!
கதை படைத்து
காதல் சிறந்திட..

தமிழ் புகழ் பெற்றது ..!!
பிறர் நம் தமிழ் கற்று
புலமையில் செழிந்திட ..

தமிழ் செம்மொழி ஆனது ..!!
வீரத்தையும் காதலையும்
இரு கண்களாக கொண்டு
திராவிட மக்கள் தமிழ் பேசி வாழ்ந்திட..

தமிழ் தொண்மையில் சிறந்தது..!!
தமிழர் பண்பாடு
யுகங்கள் பல கடந்திட ..

தமிழ் கடவுளானது..!!
முருகா என்று பக்தர்கள்
என்றும் போற்றி வணங்கிட..




Saturday, May 14, 2011



 "தொலைந்து போ"

என்ற உன் சொல்லுக்கு  எவ்வளவு மரியாதை

இன்னமும் தேடி கொண்டே தான் இருக்கிறேன் 

தொலைந்த என்னை

தொலையாத உன்னுள் . . ! ! 

Friday, May 13, 2011


என்றாவது தான் வெளியே செல்கிறேன்

எத்தனை முகங்கள்

புறக்கண்கள் தேடினது உன்னை மட்டும்...

அலுத்துக்கொண்டேன் நான்...

இந்த கூடத்திலும் நீ இல்லை..

அகக்கண்கள் தேடினது என்னை மட்டும்

நீ வாழும் திசையில்...


தமிழை ருசிப்பவர்களை ரசிப்பவள் நான்

என்று தானே கூறினேன்

உனக்கு பிடித்த தமிழ் என்பதால்..




உன்னை கொஞ்சமாக பிடிக்கும் என்று  சொன்னேன்
உன்னை நேசிக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டி

உன்னை பிடிக்கவே இல்லை என்று  சொன்னேன்
உன் பிரிவையும்  நேசிக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டி



எத்தனை பிறவியும் எடுப்பேன்

உன்னுடன் சேர்ந்து வாழ

"காதலிக்கிறேன்" என்று

ஒருமுறை சொல்லிவிடு போதும்..!!!
  


நீ  ஒரு வார்த்தை பேசினாலே போதும் 
வானில் பறந்து போகிற நான்..
மறுவார்த்தை கேட்கவே
தரையில் இறங்கிவிடுகிறேன்..
 



Saturday, April 23, 2011

அழகே அழகு..





அன்னியரிடம் பேசினால் 
அடி தான் என்று 
என் வாழ்க்கையின் ஆதியில் 
முதல் அன்னியராக
திகழ்ந்த என் அன்னையே  சொன்னாளே 
அழகே அழகு.. 

மழை பெய்கிறது
அனைவரும் ஓடுகிறார்கள்
சுடுமோ..??
வெறித்து வெறித்து பார்த்தேன்
மழையில் நனையாதே   
என்று அம்மா சொன்னாள்
வலிக்குமோ..??
என்று பல கேள்விகளுடன்
முதல் முறை மழையை வாரி கட்டிகொண்டேன்
சில்லென்று உடலில் பாய்ந்த ஒரு வித மின்சாரம்
ஹேய்ய்ய்... ஹைய்யா ...
என்று குதித்து விளையாடினேனே ..
அழகே அழகு..

அன்றொரு நாள் 
மின்சாரம் இல்லாத இரவு நேரத்தில் 
ஊ.... என்று நான் சத்தமிட்ட பொழுது 
என் தம்பி அலறி ஓடினானே
அழகே அழகு..
  
முதல் கவிதையை
முதல் வேற்றாளிடம்
முதல் முறையாக 
காண்பித்தேனே
அழகே அழகு..

சித்தி ...
எனக்கு ...
மருதாணி... 
என்று நான்கு வயது குழந்தை 
தயங்கி தயங்கி கேட்கையில்
அதே வயதில் எனக்கு நானே 
மருதாணி போட்டு கொண்ட நினைவு 
அழகே அழகு..

அவள் பேசினாலே பிடிக்கவில்லை
கேட்கவும் விருப்பம் இல்லை
இருப்பினும் நான்கே வருடத்தில்
 என் ஆசை தோழியாய் ஆனாளே
அழகே அழகு..

கண்களை மூடினேன் குழப்பத்துடன் 
பறந்ததோ கனவின் அரண்மனைக்கு 
புரியாத புதிர் 
என் வாழ்கையில் உண்டு
அது ஒரு ஆசிரியர் நடத்திய பாடமே
அழகே அழகு..

அவனுக்காக எதையும் செய்வேன் நான்
அவன் கேட்காமலே நிறைய செய்த பொழுது
நன்றி என்ற ஒற்றை சொல்லில் அவன் 
அழகே அழகு...  

என் தோழியை சுற்றி எத்தனை பேர்
 மனம் திறந்து பேச வாய்ப்பே இல்லை..
சில்லென்று காற்று வீச..,
மரங்களின் நிழல் 
எங்களை  அணைக்க துடிக்க..
எங்கும் அமைதி நிலவ  
இருவர் மட்டும் சேர்ந்து போகயில் 
ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லையே..
அழகே அழகு.. 
  
நான் வளர்க்கும் காகம் 
காக்கா காக்கா என்று என் வீட்டு ஜன்னலில் 
எட்டி பார்த்து என்னை அழைத்ததே..
அழகே அழகு..  

பல நாட்களுக்கு பிறகு  
நமக்கு பிடித்தவரிடம் இருந்து வரும் 
ஒரு குறுந்தகவல்  "enna panra"
அழகே அழகு...  

சிரித்துகொண்டே கை நீட்டிய குழந்தையை
வாரி அணைத்தேனே 
அதன் வாயிலிருந்து அமிர்தம் பொழிந்து 
என் உடையை லேசாக நனைத்தாளே 
அழகே அழகு.. 


நான் முதன்முதலில் ரசித்த கவிதைகளை
படைத்தவனுக்கு நான் தான் குருவாம்
பொய்யோ மெய்யோ
அவன் சொற்கள் அனைத்துமே
அழகே அழகு.. 

அம்மா என்று தான் நான் அழைத்தேன்
என்னம்மா என்று என் தந்தை கேட்டாரே 
அழகே அழகு ..

"நான் யார் உனக்கு"
என்று கேட்கையில்
"ஹ்ம்ம்... எத்தனை முறை தான்
உனக்கு  சொல்வது" என்று அலுத்துக்கொண்டானே    
அழகே அழகு.. 
  
ஒரு விரல் கோர்த்து
நானும் அவளும்  நடக்கையில் 
உயிர் தோழி என்ற எண்ணம் 
அழகே அழகு...  
  
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் 
நிறைய அழகுகள் 
காத்துக்கொண்டிருக்கின்றன
ரசிகர்கள் இல்லாமல்
இதுவும் 
அழகே அழகு..



Friday, April 22, 2011

தலைப்பை இன்னமும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்



நமக்கான நாட்களை 
வலைவீசி தேடி
நமக்கான பொழுதுகளை
மறுபடி நினைத்துக்கொண்டு
சிரிக்கிறாய் 
அழுகிறாய் ..
பொக்கிஷமாக நெஞ்சில் புதைக்கிறாய் ... 

னக்கு பிடித்தவன் 
கேட்டு கொண்டே இருந்ததான் 
நீ  பேசி கொண்டே இருக்க..

வருந்துகிறேன்..
ஒரு முறை அவன் பேசி 
நீ கேட்கவில்லையே.. 
இன்று கேட்காமலே சென்றான்
நீ பேசி கொண்டே இருக்க..

நேரம் போனதே தெரியாமல் 
பேசிய பொழுதுகள் கேட்கின்றன
உன்னிடம் பேச அவனுக்கு எங்கே நேரம்...

காத்துக்கொண்டிருந்த பொழுதுகள் கேட்கின்றன
அவனை நினைக்காமல் இருக்க உனக்கு எங்கே நேரம்..

உன் பெயரை எழுதுகையில் அவன் பெயர் மனதில் ஓட 
கவிதை பிறக்கையில் அவனே நினைவில் வர
தலைப்பை மட்டும் இன்னமும் 
தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்  ...