நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Friday, April 22, 2011

தலைப்பை இன்னமும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்



நமக்கான நாட்களை 
வலைவீசி தேடி
நமக்கான பொழுதுகளை
மறுபடி நினைத்துக்கொண்டு
சிரிக்கிறாய் 
அழுகிறாய் ..
பொக்கிஷமாக நெஞ்சில் புதைக்கிறாய் ... 

னக்கு பிடித்தவன் 
கேட்டு கொண்டே இருந்ததான் 
நீ  பேசி கொண்டே இருக்க..

வருந்துகிறேன்..
ஒரு முறை அவன் பேசி 
நீ கேட்கவில்லையே.. 
இன்று கேட்காமலே சென்றான்
நீ பேசி கொண்டே இருக்க..

நேரம் போனதே தெரியாமல் 
பேசிய பொழுதுகள் கேட்கின்றன
உன்னிடம் பேச அவனுக்கு எங்கே நேரம்...

காத்துக்கொண்டிருந்த பொழுதுகள் கேட்கின்றன
அவனை நினைக்காமல் இருக்க உனக்கு எங்கே நேரம்..

உன் பெயரை எழுதுகையில் அவன் பெயர் மனதில் ஓட 
கவிதை பிறக்கையில் அவனே நினைவில் வர
தலைப்பை மட்டும் இன்னமும் 
தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்  ...





No comments:

Post a Comment