சில்லென்ற
மரங்களின் காற்றில்
பெருநகரத்தின்
ஜொலிக்கும் ஒளிகளில்
நாம் செல்லும் எதிர் எதிர் பாதையிலிருந்து
தூரத்திலும்
கூட்டத்திலும்
மயங்கும்
இருட்டிலும்
ஏனோ திரும்பி நின்று
நம் கண்கள் கலந்ததோ அன்று
அனைத்து
காதல் பாடல்களும்
அந்த சில நொடிகளுக்காகவே
பாடியது
போல் ஒரு உணர்வு
அத்தருணம் போதுமே
எனக்கான
நம் கவிதை உலகம் உயிர்
வாழ
No comments:
Post a Comment