சிந்தனை துளிகளில் மிதந்தேன் ..
ஒவ்வொரு துளி பேசிய கதையில் மூழ்கினேன்..
சில நினைவுகளில் சிதறும் சோகங்கள்...
பல நினைவுகளில் குதூகல கொண்டாட்டங்கள்..
இன்னும் இருப்பதோ பயத்தில்
புதைந்த வருங்காலத்தின் திட்டங்கள்...
மௌன அலையில் பல பல கனவுகள்..
சுனாமி போல் பொங்கி எழும் திறமைகள்..
சாதிக்க துடிக்கும் நெஞ்சங்கள்..
தலைப்பு செய்திகள் போல் நான்கு
வருடச்சுவடுகளும் நகர்கையில்..,
விடைபெறும் நண்பர்கள் கூட்டம்..
கேட்காமல் கேட்கும் சிரிப்புகள் பேச்சுக்கள்
நம் இதயங்களில் மட்டும் அலையோசையாக..
என்றும் வலியோடு தித்திக்கும் நம் கண்ணீர்த்துளி போல்..
அழகான கல்லூரி நாட்கள் ..!!!
No comments:
Post a Comment