நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Wednesday, April 13, 2011

மூன்றாம் பிறை திங்களின் காதல்



உனக்கான வருடத்தில்
மாதம் பன்னிரண்டு
உன்னை பார்க்க
சுற்றிவரும் வருடத்தில் 
எனக்கான மாதம் பதிமூன்று...

உன்னை பதியாக எண்ணி 
பதினைந்தே நாளில் 
ஜொலிக்கும் பவுர்ணமியாய்
மயக்கும் இருட்டில் 
மின்னும் நட்சத்திர கூட்டத்தில்
காத்திருப்பேன் அன்றொரு நாள்
ஒவ்வொரு மாதமும்..

என்னை விலை பேச
பல கவிதைகள் போட்டி போட..
என் மனதை வலை வீச
பல பாடல்கள் பாடி தீண்ட..
நீயோ இருளில் மூழ்கி
வனவாசம் செய்வதேன்...???

உன்னை உரசாமல்
சுற்றி வருகிறேன்
நிலா புவன் என்று
என் பெயர் மாறும் வரை..

என்றும் மௌனமே பதில்
என அறிந்தால் 
என்றோ வெடித்து
நொறுங்கிற்கும்  என் மனம்..

தூரத்தில் 
காத்திருக்கிறேன்
நீ வாழும் இரவில் ..  
உன் பார்வை
தீண்டும் வரை..

உன்னையே நினைத்து
தினம் தினம் தேய்கிறேன்..
என்னை ஈர்க்கும் சக்திக்கு
என் மனம் புரிவது 
எப்பொழுது..???

2 comments:

  1. தூரத்தில்
    காத்திருக்கிறேன்
    நீ வாழும் இரவில் ..
    உன் பார்வை
    தீண்டும் வரை..fantastic lines.....u r amazing 2 me..coz i didnt xpect a chennai grl writing ths much better in tamil..niz feel in lines..jus arrange it better 2 ad crisp..keep it rocking!!!..

    ReplyDelete
  2. hmmm... :)
    will alwayz do unxpectd things at unxpectd times
    as it alwayz happens d same way in ma lyf :)

    so its true dat u wnt ve xpectd better
    tamil frm me
    will surely improve 2 reach an unxpectd level :)
    thanq :)

    ReplyDelete