வெவ்வேறு மனங்கள்
வெவ்வேறு குணங்கள்
வெவ்வேறு மொழிகள்
வெவ்வேறு இடங்கள்
வெவ்வேறு முறையில்
இணைந்த பொழுதும்,
தூரத்தில் இருந்த
நம் மனங்கள்..,
நெருக்கத்தில் உரையாடின..
நட்பின் அகராதியை
புரிந்தவாறு...!!!
நீ பேச நான் பேச
நான் பேச நீ பேச
பேசுவோம் என நீயும் நானும்
பேசாமல் இருந்த பொழுதும்..
அமிர்ததில் மிதந்தது
நம் இதயமே..
நீ பேசும் பொழுது
நெஞ்சம் படபடக்க..
நீ பாடும் பொழுது
கண்கள் சொருக..
உன் கவிதையை படித்து
பனியாய் உருகினேன்..,
என்னை பிடிக்கவில்லை
என்ற பொழுதும்..
நீ ஏதும் கூறாமல்
கண்ணீர் வடிக்க..
தவறின் அறிகுறியை
ஏற்று நட்பின் சுவட்டில்
நீ எழுதி எழுதி அழிக்க..
நீ பேசுவாய் என நானும்
நான் பேசுவேன் என நீயும்
பேசாமல் இருந்த பொழுது
நட்பும் முள்ளில் சிக்கியது..
வலியுடன் அழுது சிதறியது
ஒன்றுடன் ஒன்று பிணைந்த
நம் இதயமே.. நாம் அறியாமலே...
காற்றோடு நீ பேச நான் பேச
தேன் அருவியும் பாயவில்லை
நம் காதினிலே..
காத்திருந்த நாட்கள் அனைத்தும்
மேகங்கள் போல் திசை மாறி மறைந்தன..
நட்பிலே பேசி நட்பிலே பழகி
நட்பிலேயே முடிந்தது நம் நட்பு..
No comments:
Post a Comment