பிறந்தது சுரங்கப்பாதையில்
விளையாடியது ரயில் தண்டவாளங்களில்
வீரத்தை காண்பித்தது ரயில்நிலையம் உணவகத்தில்
கிடைத்தது கற்களால் அடி
போனது ஒரு கண்
அம்மா என்று அழைக்க உடம்பில் சக்தி இல்லை
சில்லென்ற வீசிய காற்றில்
மல்லாந்து படுத்து உறங்கும் நேரம்
வீல் என்ற நான்கு வயது குழந்தையின் அலறல்
அடடா என்னை பார்த்தா ..???
மழை பெய்ந்து ஓய்ந்த நேரம் ..
குட்டையில் தண்ணீர் பருக
என்னையே பார்த்த அந்த ஒரு நொடி ..
என்ன ஒரு கோரமான பிறவி நான் ..
சொர்கத்தை தேடி ஓடினேன் ..
ஒதுக்கியது சமூகம் ..
கிடைத்தது உதை ..
சர்ர் என்று ஒரு வண்டியின் நிறுத்தம் ..
எட்டி பார்த்தேன்
அதன் மேல் என்னை உதைத்த அதே இனத்தின் கையில்
கொஞ்சி விளையாடியது என் இனம் ..
அதற்கு பெயர் ஸ்வீட் பப்பி..
என் பெயரோ தெரு நாய் ..
No comments:
Post a Comment