அன்றொரு நாள் பேசாமல் இருந்தோமே
எப்படி கடந்தது உன் நாட்கள் என நீ கேட்கையில்
உன் மௌனமே கவிதையாக இருந்தது என்றேன் ..
பொய்யான கோபத்தில் உன் உதடுகள் திட்ட திட்ட
உன் சிவந்த கன்னமும் அழகிய கண்களும்
உண்மையையே காட்டின எனக்கு மட்டும் ..
எனக்கான கவிதை எங்கே என நீ கேட்கையில் தான்
உணர்ந்தேன் ஆஹா இத்தனை நேரம் கவிதையை
ரசிப்பதிலேயே நேரம் போய்விட்டதே என்று... ;)
No comments:
Post a Comment