மேகங்களின் இருட்டில்
அடர்ந்த வனம்
நிசப்தத்தில்..
காற்றை பிடிக்க
தரையில் ஊர்ந்தோடிய
இலைகள்...
மெல்ல மெல்ல
சிரித்து குலுங்கிய
மரங்கள்..
மின்னல் ஒளியில்
தெரிந்த அவன்
கண்கள்..
அவள் உதட்டில் விழுந்த
அந்த முதல் வெள்ளி துளியை
சுட சுட சுட்டெரித்த
அவன் பார்வை..
ஒரு கவிதையையே
எழுதி விட்டான்
அந்த கள்ளன்
அவள் கண்கள் வாயிலாக..
வெப்பம் அதிகரிக்க மிக அருகில்..
அவன் விடும் மூச்சை சுவாசிக்கிறாள்
என்ற படபடப்பில்
இருந்த - அவள்,
செவிகளை உரசி ரகசியம் பேசினான்
காதில் விழுந்ததோ ஒற்றை சொல் " Silence "
கட்டி இறுக்கிய நொடியில்
மின்சாரம் பாய்ந்த வேகத்தில்
ஜோர் என்று வாரி அணைத்தது
மழை துளிகள் ..
என்னையும் அவனையும் மட்டும் ..
குழம்பினேன் ஏதும் புரியாமல்..
அவர்களை பார்க்க சகிக்க முடியாமல்
கண்களை இறுக்கி மூடினேன்..
என் உதடோ
என் கரிகாலன் என்று
ஏதோ உறவு கொண்டாடி
முனுமுனுக்க..
திடுக்கென ஏதோ பயத்தில் கனவிலிருந்து விழித்து
ஆச்சர்யத்தின் உச்சகட்டத்தில் நான்
முழுவதுமாக நனைந்திருக்கிறேன் என்று உணர்கையில் ...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
-------------Aiyyooo veetla current illa :( :( :P :D --------------
No comments:
Post a Comment