எனக்கான அன்பே
உன்னிடம் இல்லாத பொழுது..
அன்பை வெளிப்படுத்தி பயனேது..??
நினைப்பின் பாலத்தின்
அப்பால் வாழ்ந்தாலும்..,
நினைக்கிறேன்...
மனதில் படகோட்டும் உனக்காக..
எனக்கான பல கேள்விகள்
உன்னுள் குவிந்த பொழுது
மௌனமே உன் சார்பில்
என்னுள் குடியேரியதேன்..???
வருடத்தின் திகதிகள்
தண்ணீரில் கரைந்தாலும்
நமக்கான நாட்களை
குறித்துக்கொண்டேன்
என் உயிர் மூச்சில்...
உன் வாழ்நாள் முழுவதும் எனக்காக வாழ்வாயா
என நீ கேட்கையில்
வாழட்டுமா..???
என்று என் மனம் பதிலளிக்கையில்..
கேட்காமல் போனது உனக்கு
என் பொய்யான பேச்சின் சத்தத்தில்...
எனக்கான காதலே
உன்னிடம் இல்லாத பொழுது
காதலை சொல்லி வாழ்வேது ..??
No comments:
Post a Comment